மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் என்பது நீண்ட கால அடிப்படையில் ஒரு நல்ல வருமானத்தை தரக்கூடிய ஒரு திட்டமாகும். அதிலும் சிப் முறையில் முதலீடு செய்தால் கூட்டு வட்டி மூலம் நல்ல லாபம் சம்பாதிக்க இயலும். அதனால் இளம் தலைமுறையினர் மத்தியில் சிறு முதலீடு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
என்னவென்றால், இந்த திட்டத்தில் ஒரே தவணையில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல், மாதம்தோறும் தொடர்ந்து சிறு சிறு தொகையாக முதலீடு செய்வதுதான் சிப். இந்த முதலீடுகள் சேர்ந்து லாபமும், சேர்ந்து கூட்டு வட்டி மூலம் அதிக லாபத்தை தரும். மேலும் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்தால் 15 முதல் 16% வரை லாபம் எதிர்பார்க்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே மாதம்தோறும் 1,000 ரூபாய் முதலீடு செய்தால் 34 ஆண்டுகள் மெச்சூரிட்டியில் 1 கோடி ரூபாய் கிடைக்கும். 26 ஆண்டுகளிலும் இந்த இலக்கை அடையமுடியும். மாதந்தோறும் 1,000 ரூபாய் முதலீடு செய்வதாக வைத்துக்கொண்டால் ஒவ்வொரு வருடமும் முதலீட்டு தொகையை 15% உயர்த்த வேண்டும். அதன்படி, 26 ஆண்டுகளிலேயே 1 கோடி ரூபாய் சம்பாதிக்க இயலும் அதனால் இந்த திட்டம் ஒரு சிறந்த திட்டமாகும்.