நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பகுதியில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவருடைய மனைவி உள்ளிட்ட 14 பேர் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியது. இதில் பிபின் ராவத், அவருடைய மனைவி மற்றும் 11 வீரர்களும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த விபத்துக்கு முன்னதாக ஒரு நபர் வீடியோ ஓன்றை எடுத்தார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில்வைரலானது.
இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் கடைசி நிமிட வீடியோ உண்மைதானா என்பதை கண்டறிவதற்கு வீடியோ எடுத்த நபரின் செல்போனை கோவை தடய அறிவியல் ஆய்வகத்துக்கு காவல்துறையினர் அனுப்பியுள்ளனர். மேலும் விபத்தின் போது நிலவிய வானிலை குறித்து தகவல் அளிக்க வேண்டும் என்று சென்னை வானிலை மையதுக்கும், விபத்து நடந்த பகுதியில் உயர் மின்னழுத்த கம்பிகள் உள்ளதா என மின்வாரியத்திடம் விளக்கம் கேட்டு நீலகிரி மாவட்ட காவல் துறை கடிதம் எழுதியுள்ளது.