Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் தொடக்க கூட்டுறவு பண்டகச் சாலைகளில் வேலைபார்த்து வருகின்ற அரசு ஊழியர்களுக்கு 7% ஊதியம் உயர்வு வழங்கி கூட்டுறவுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை பாதிப்பு கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில் அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி(DA) உள்ளிட்ட சில கூடுதல் சலுகைகள் மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது தமிழக அரசுத்துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழக அரசின் கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகள், பல்பொருள் அங்காடிகளின் பண்டகசாலை செயலர், கணக்கர், எழுத்தர், காசாளர் போன்றோருக்கு இந்த உயர்வு அமல்படுத்தப்பட இருக்கிறது.

கடந்த 2016-ம் வருடம் இந்த ஊழியர்களுக்கு நடைமுறை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. இது அறிவிக்கப்பட்டு தற்போது 5 வருடங்கள் முடிவடைந்து இருக்கின்ற நிலையில் ஊதிய உயர்வு அளிக்ககோரி அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆலோசனை செய்வதற்கு அரசு சிறப்பு குழுவின் பரிந்துரையின்படி, புதிய ஊதிய நிர்ணயம் செய்ய அனுமதி வழங்கி மண்டல இணை பதிவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி லாபத்தில் செயல்படும் பண்டகசாலை ஊழியர்களுக்கு 7 சதவீதம் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனையடுத்து இந்த ஆண்டில் அதிக லாபம் ஈட்டிய சங்கங்களுக்கு 5% என்றும் நஷ்டத்தில் செயல்படும் பண்டகசாலை ஊழியர்களுக்கு 3% என்றும் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வானது வரும் 2022-ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வர இருக்கிறது. மேலும் இந்த ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி, பயணப்படி, மருத்துவப்படி, மாற்றுத்திறனாளி போக்குவரத்துப்படி, மருத்துவ காப்பீட்டு திட்டம் போன்றவற்றையும் செயல்படுத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறு அறிவித்துள்ள புதிய ஊதிய உயர்வு மூலமாக லட்சக் கணக்கிலான ஊழியர்கள் பயனடைய இருக்கின்றனர்

Categories

Tech |