குட்கா கடத்தலில் ஈடுபட்ட மளிகை கடைக்காரர் உள்ட்பட 4 பேரை கைது செய்த போலீசார் 229 கிலோ குட்காவை பறிமுதல் செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சாலையில் மோகனூர் இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, ஓவியா மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது ஆம்னி வேனில் 229 கிலோ குட்கவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து குட்காவை கடத்தி வந்த ஆம்னி வேன் டிரைவர் பிரின்ஸ், மோகனூர் புதுதெருவை சேர்ந்த மளிகை கடைக்காரர்களான வினோத், சென்னியப்பன், சுப்பிரமணியபுரம் பகுதியில் வசிக்கும் கடைக்காரர் குமார் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு 2,29,000 ரூபாய் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.