Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…. டிசம்பர்-15 முதல்…. தெற்கு ரயில்வே அதிரடி…!!!!

பொள்ளாச்சி – திருச்செந்தூர், மதுரை வழியாக மற்றும் செங்கோட்டை – கொல்லம் ரயில் நிலையங்களுக்கு இடையே டிசம்பர் 15 ஆம் தேதி முதல் விரைவு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி திருச்செந்தூர் – பொள்ளாச்சி விரைவு ரயில் டிசம்பர் 15 முதல் திருச்செந்தூரிலிருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு இரவு 8.40 மணிக்கு பொள்ளாச்சி சென்று சேரும் எனவும், மறுமார்க்கத்தில் பொள்ளாச்சி – திருச்செந்தூர் விரைவு ரயில் டிசம்பர் 16 முதல் பொள்ளாச்சியில் இருந்து காலை 6.40 மணிக்கு புறப்பட்டு மாலை 3.45 மணிக்கு திருச்செந்தூர் சென்று சேரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ரயில்கள் பாலக்காடு – பொள்ளாச்சி மற்றும் பொள்ளாச்சி – பாலக்காடு முன்பதிவில்லா சிறப்பு ரயில்களின் இணைப்பு ரயில்களாக செயல்படும். அதேபோன்று செங்கோட்டை – கொல்லம் முன்பதிவற்ற விரைவு சிறப்பு ரயில் டிசம்பர் 15 முதல் செங்கோட்டையில் இருந்து முற்பகல் 11.35 மணிக்கு புறப்பட்டு மாலை 3.35 மணிக்கு கொல்லம் சென்று சேரும். மறுமார்க்கத்தில் கொல்லம் – செங்கோட்டை முன்பதிவற்ற விரைவு சிறப்பு ரயில் டிசம்பர் 16 முதல் கொல்லத்தில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.20 மணிக்கு செங்கோட்டை வந்து சேரும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Categories

Tech |