Categories
தேசிய செய்திகள்

JUSTIN : ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம்….. அரசு அதிரடி அறிவிப்பு…!!

ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ 50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம்,குன்னூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படை தளபதி பிபின் ராவத்,அவரது மனைவி மற்றும் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இதைத்தொடர்ந்து எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர் ஒருவரின் உடல்கள் மட்டும் அடையாளம் காணப்பட்டது. இதில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த கமாண்டோ வீரர்கள் சாய் தேஜா மற்றும் விவேக் குமார் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவர்களின் உடல்கள் இன்று காலை அவர்களது குடும்பத்தினருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் ஜடேஜாவின் குடும்பத்திற்கு ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,ஆந்திர முதல்-மந்திரி அலுவலகம் தனது  டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: “தமிழ்நாடு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த லான்ஸ் நாயக் பி சாய் தேஜாவின் குடும்பத்திற்கு ஆந்திரப் பிரதேச முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி ரூ.50 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். உயிரிழந்த சாய் தேஜா அவர்கள் முப்படைத்தளபதி பிபின் ராவத் அவர்களின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிவர்” என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |