பெரும்பாலான நலத்திட்டங்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018-ஆம் வருடம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-வில் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள சாகேப்கஞ்ச், மர்வான், அவுராய் ப்ளாக்கில் தகுதியற்ற நபர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் குழாய் இணைப்பு திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடைபெற்று உள்ளது. இதில் கடந்த 2018-ஆம் ஆண்டு பாட்னா மாவட்டம் ப்ளாக் மற்றும் 2019-ல் மதுபானி மாவட்டம் மாதேபூர் ப்ளாகிலும் சமூக பாதுகாப்பு பென்சன் திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை. இதனையடுத்து 2019-ஆம் ஆண்டு ஆர்வால் மாவட்டம் குர்தா ப்ளாக்கில் குழந்தைகளுக்கு சமைத்த உணவு கொடுக்கும் திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது. இதனிடையில் 2014-ஆம் ஆண்டு மது பானியின் ஹர்லாகியில் உள்ள அரசு நிலத்தில் தனியார் பள்ளி கட்டப்பட்டுள்ளது. இதற்கு அரசு அதிகாரிகள் பல பேர் உடந்தையாக இருந்துள்ளனர்.
இவ்வாறு கடந்த சில வருடங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாட்னாவில் மாநில கிராம வளர்ச்சி துறை அமைச்சர் ஸ்ரவன் குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது “முறைகேடுகளில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளின் பட்டியல் கிடைத்துள்ளது. ஆகவே அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை பல வருடங்களாக நிலுவையில் இருக்கிறது. இதற்கான விசாரணையை உரிய அதிகாரிகள் விரைவாக முடிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எங்கள் அரசில் முறைகேடுகளுக்கு இடமில்லை என்றும் யாராக இருந்தாலும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் இதற்கு முன் உதாரணமாக அண்மையில் அரசு எடுத்த நடவடிக்கைகள் இருக்கும். இதற்கிடையில் தற்போது வரை அரசு நலத் திட்டங்களில் முறைகேட்டில் ஈடுபட்ட 200 அதிகாரிகளுக்கு பணி இடமாற்றம் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு சம்பள உயர்வும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஒரு நல்ல பாடமாக இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.