நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த மாதம் 29-ஆம் தேதி அன்று நடைபெற்றது வருகிறது. அந்தக் கூட்டத் தொடரில் போலி ரேஷன் கார்டுகள் குறித்து, நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி கேட்டார். அந்தக் கேள்விக்கு பாஜகவை சேர்ந்த மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னவென்றால், ரேஷன் அட்டைகளின் தரவுகள் டிஜிட்டல் மயம், போலி அட்டைகளை நீக்குதல், நிரந்தரமான குடிபெயர்வு, இறப்புகள், ஒரே பெயரில் 2 அட்டைகள் போலி அட்டைகள் கண்டறிதல் ஆகியவை காரணமாக கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டுவரை 4.25 கோடி குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் வீடுகளுக்கு நேரடியாக சென்று, ஆய்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு பின்னர் தான் போலி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தெரிவித்துள்ளன.
இதையடுத்து குடும்ப அட்டையுடன் ஆதார் அட்டைகளை இணைக்காத நிலையில், எந்தக் குடும்ப அட்டையும் நீக்கப்படவில்லை. மேலும் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி வரை ரேஷன் அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம். மேலும் ரேஷன் அட்டைகளுக்கு பொருட்கள் வழங்குவதை மறுக்கக்கூடாது என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அழிக்கப்பட்டுள்ளன இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.