சாம்பியன் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் பேயர்ன் முனிச் அணி வெற்றி பெற்றது.
சாம்பியன் லீக் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் பார்சிலோனா- பேயர்ன் முனிச் அணிகள் மோதின . இதில் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே பேயர்ன் முனிச் அணி ஆதிக்கம் செலுத்தியது .அதோடு ஆட்டத்தின் தொடக்கத்தில் 34-வது நிமிடத்தில் பேயர்ன் அணி வீரர் தாமஸ் முல்லர் முதல் கோலை பதிவு செய்தார் .
இதைத்தொடர்ந்து பேயர்ன் அணி வீரர் லெரோ சனே 43- வது நிமிடத்திலும், ஜமா முசியாலா 62- வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இறுதியாக 3-0 என்ற கோல் கணக்கில் பேயர்ன் முனிச் அணி அணி வெற்றி பெற்றது.