Categories
மாநில செய்திகள்

BREAKING: இனி தியேட்டர், டாஸ்மாக், கோவில்கள்…. சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தடுப்பூசி போடும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. அதனால் ஒவ்வொரு வாரமும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றனர். இருந்தாலும் கூட, சில மக்கள் தடுப்பூசி செலுத்தாமல் அலட்சியம் காட்டி வருவதால், பல்வேறு மாவட்டங்களில் தற்போது தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பொது இடங்களுக்கு செல்வதற்கும் தடுப்பூசி கட்டாயம் என்று அரசு அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் பல்வேறு கட்டுப்பாடுகளை மக்களுக்கு விதித்து வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே திரையரங்குகளில் அனுமதி அளிக்கப்படும் என்று திருவள்ளுவர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான்வர்க்கீஸ் கூறியுள்ளார். மேலும் டாஸ்மாக் கடைகள் மற்றும் கோவில்களில் தடுப்பூசி போட்டிருந்தால்தான் அனுமதி என்பது விரைவில் கொண்டுவரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |