பர்சனல் லோன் வாங்க நினைப்பவர்கள் மிகக்குறைந்த வட்டியில் எல்ஐசி பாலிசி மூலமாக வாங்கலாம். இது தொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் எல்ஐசி எனப்படும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் . அவற்றுள் மிக முக்கியமான ஒன்று எல்ஐசி பர்சனல் லோன். தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் உள்ள வட்டியை விட மிகக் குறைந்த வட்டியில் இதில் லோன் கிடைக்கும். 9% தொடங்கி நீங்கள் கடன் பெற்றுக் கொள்ள முடியும். திருப்பி செலுத்தும் கால அளவும் குறைவாக இருக்கும். எல்.ஐ.சி. பாலிசிதாரர்கள் அனைவருக்குமே இதில் கடன் கிடைக்கும். அவர்களின் வருமானத்தை பொருத்து கடன் பெறும் வசதி இருக்கும்.
ஐந்து ஆண்டுகால கடனுக்கு 9% வட்டி முதல் தொடங்குகின்றது. உங்களது பாலிசியை சரண்டர் மதிப்பிலிருந்து சுமார் 90% வரை நீங்கள் கடனாக பெற முடியும். அதாவது உங்களுடைய பாலிசி சரண்டர் மதிப்பு 5 லட்சமாக இருந்தால் அதில் 4.5 லட்சம் வரை உங்களால் கடன் பெற முடியும். கடன் வரம்பு காலத்திற்கு முன்னரே நீங்கள் கடனை திருப்பி செலுத்தும் வசதியும் உள்ளது. அவ்வாறு செலுத்தினால் கூடுதல் கட்டணங்களை தவிர்க்க முடியும். நீங்கள் ஒரு ஆண்டு காலத்திற்கு ஒரு லட்சம் கடன் வாங்கினால் 9 சதவீத வட்டியில், ரூ.8,745 ஈ.எம்.ஐ. செலுத்த வேண்டியிருக்கும். இதே கடனை இரண்டு ஆண்டுகளில் அடைக்க வேண்டியதாக இருந்தால் நீங்கள் ஈ.எம்.ஐ.ஆக ரூ.4,568 செலுத்த வேண்டும்.
மூன்று ஆண்டுகளுக்கு ரூ.3,180, நான்கு ஆண்டுகளுக்கு ரூ.2,489 மற்றும் 5 ஆண்டுகளுக்கு ரூ.2,076 ஈ.எம்.ஐ. செலுத்த வேண்டியிருக்கும். அதுமட்டுமில்லாமல் எல்ஐசி வெப்சைட்டில் நீங்கள் பெர்சனல் லோனுக்கு விண்ணப்பிக்க முடியும்.
அதேபோல, நீங்கள் ரூ.5 லட்சம் கடன் வாங்கினால்
1 வருடம் – ரூ.44,191
2 வருடம் – ரூ.23,304
3 வருடம் – ரூ.18,472
4 வருடம் – ரூ.15,000
5 வருடம் – ரூ.12,917
அதிலேயே விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து பின்னர் உங்கள் கையொப்பமிட்டு அதனை பதிவேற்றம் செய்துகொள்ளலாம். உங்களுடைய விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு தேவையான தொகையை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.