அடுத்தடுத்த 4 கடைகளில் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி-எட்டயபுரம் சாலை பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் உள்ள அடுத்தடுத்த நான்கு கடைகளில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து அங்கிருந்த பணம் மற்றும் பொருட்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து சிப்காட் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது பிரையண்ட் நகர் பகுதியில் வசிக்கும் கௌதம் மற்றும் 2 பேர் சேர்ந்து 4 கடைகளிலும் பூட்டை உடைத்து திருடியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கௌதமை கைது செய்ததோடு அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 2 நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.