நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று மதியம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி, ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரர்களின் உடல் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது. தற்போது அவரது உடல் டெல்லிக்கு எடுத்துச்செல்லப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடலை ஏற்றி செல்லும் ஆம்புலன்ஸ் மீது மலர்தூவி மரியாதை செலுத்தினர். சாலை மார்க்கமாக எடுத்துச்செல்லும் உடலுக்கு குன்னூர், மேட்டுப்பாளையம், கோவை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் தேசிய கொடிகளை ஏந்தி மலர்தூவி தங்கள் இறுதி மரியாதை செலுத்தியுள்ளனர். இதுதொடர்பான வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.