Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிச்சைக்காரன் மீது மோதிய அரசு பேருந்து …!!

பேருந்து நிலையத்தில் இருந்து வெளி வந்த அரசு பேருந்து அங்கு நடந்து சென்று கொண்டிருந்த பிச்சைக்காரன் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில்உள்ள பேருந்து நிலையத்திலிருந்து வெளியில் வந்த பிச்சைக்காரர் மீது பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவரது உடைமைகளை சோதனையிட்டதில் பிச்சை எடுத்த பணம் மட்டுமே இருந்தது.

 

ஆனால் அவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பதற்கான அடையாளங்கள் எதுவும் கிடைக்கவில்லை. விபத்து ஏற்படுத்திய  ஓட்டுனர் அருண்குமார் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனிடையே விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |