‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் அப்டேட்டை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் தற்போது ”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில், இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு மைசூரில் தொடங்குவதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
https://www.instagram.com/p/CXL67U_vOBQ/?utm_source=ig_embed&ig_rid=c297dc33-8c0d-434b-bb98-7d628c2fb5d9