Categories
உலக செய்திகள்

“இத தவிர வேற வழி இல்ல”….2025 ஆம் ஆண்டுக்கு பிறகு பைக்குகளுக்கு தடை…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

உலக நாடுகளில் கடந்த சில மாதங்களாகவே காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஒரு சில நாடுகளில் காற்றின் தரம் மிக மோசமடைந்து கொண்டே வருவதால், மக்களுக்கு பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. வெளியில் வருவதற்கு கூட மக்கள் அச்சப்படுகின்றனர். அதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் வாகன புகை மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையால் காற்றின் தரம் மிக மோசமடைந்து கொண்டே வருகிறது.இந்நிலையில் காற்று மாசுபாட்டை தடுக்க உலக நாடுகள் பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அவ்வகையில் தலைநகர் ஹனோயில் , திட்டமிட்டதைவிட 5 ஆண்டுகள் முன்பாகவே 2025 ஆம் ஆண்டிற்கு பிறகு பைக்குகளை அனுமதிக்கப் போவதில்லை என்று வியட்நாம் அரசு முடிவு செய்துள்ளது. போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசுபாட்டை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. ஹனோயில் மட்டும் 56 லட்சம் பைக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மற்ற நாடுகளிலும் காற்று மாசுபாட்டை குறைக்க இது போன்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. வாகனங்கள் பயன்பாட்டை குறைப்பது காற்று மாசை தடுப்பதற்கு ஒரே வழி என்று அரசு கருதுவதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |