Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN : ஜெயில் திரைப்பட வழக்கு…. டிசம்பர் 9 தள்ளிவைப்பு…. உயர்நீதிமன்றம் அதிரடி…!!!

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணநிதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயில்’ திரைப்படத்தை, க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்சின் ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ளார். இந்த படத்தை வெளியிட தடை விதிக்க கோரி ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தங்களிடம் ஒப்பந்தம் போட்டுவிட்டு க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்சின் என்ற நிறுவனத்திடம் படத்தின் வெளியீட்டு உரிமையை வழங்கியதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதனால் இந்த படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணை செய்த நீதிபதி இந்த வழக்கிற்கான தீர்ப்பை டிசம்பர் 9ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

Categories

Tech |