வங்காள விரிகுடாவில் ஜவாத் புயலால், படகு கடலுக்குள் கவிழ்ந்து மீனவர்கள் 20 பேர் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்காள விரிகுடாவில், ஒரு படகில் 21 மீனவர்கள் பயணித்துள்ளனர். அப்போது படகு தலைநகரான டாக்காவிலிருந்து, சுமார் 180 கிலோ மீட்டர் தூரத்தில் சென்று கொண்டிருந்த சமயத்தில், திடீரென்று ஜவாத் புயல் உருவாகி, திடீரென்று கடலில் கவிழ்ந்தது. இதில் மீனவர்கள் அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்து கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில், அங்கு மற்றொரு படகு வந்திருக்கிறது. அந்த படகில் இருந்தவர்கள், தத்தளித்து கொண்டிருந்த ஹபீசூர் ரகுமான் என்ற மீனவரை மட்டும் மீட்டு கரையில் சேர்த்திருக்கிறார்கள். அவர் தெரிவித்த தகவலின் படி, மற்ற 20 மீனவர்களும் கடலில் மாயமானது தெரியவந்திருக்கிறது. எனவே, மீட்பு படையினர், அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.