Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலி ஒப்பந்த பத்திரம் தயாரிப்பு…. துணை தாசில்தார் கைது…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

போலி ஒப்பந்த பத்திரம் தயாரித்து மோசடி செய்த துணை தாசில்தாரை கைது செய்து பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தாராக மணவாளன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஊஞ்சாம்பட்டியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவருடைய நிலத்தை தேனியை சேர்ந்த சந்தனபாண்டியன் என்பவருக்கு போலியான ஒப்பந்த பத்திரம் தயாரித்து கொடுத்துள்ளார். இதனையறிந்த சந்திரசேகரன் உடனடியாக தேனி மாவட்ட குற்றபிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி சில மாதங்களுக்கு முன்பு சந்தனபாண்டியனை கைது செய்துள்ளனர். இதனையடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தி கடந்த 3 ஆம் தேதி போலி பத்திரம் தயாரித்த துணை தாசில்தார் மணவாளனை கைது செய்துள்ளனர். மேலும் அவர் மீது துறைவாரியாகவும் நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் முரளிதரன் பத்திரத்தில் மோசடி செய்த மணவாளனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |