ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது .
11 அணிகள் பங்கேற்றுள்ளன 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் நேற்று இரவு நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் – ஒடிசா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் கேரளா அணி வெற்றி பெற்றது.
இதன்மூலம் 4-வது போட்டியில் விளையாடிய கேரளா அணிக்கு இது முதல் வெற்றியாகும். இதனிடையே இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் – ஏ.டி.கே. மோகன் பகான் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.