தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனையடுத்து இந்த மாத ஆரம்பத்தில் இருந்து மழை சற்று குறைய தொடங்கியுள்ளது .
அதன்படி இன்று தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி உள்ளிட்ட சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நாளை தென் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழையும். பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது