லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் மெக்கானிக்கான சாஜித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான தேவராஜ் என்பவருடன் உதிரிபாகங்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் ஓசூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மாசிநாய்க்கனப்பள்ளி பகுதியில் வைத்து முன்னால் சென்ற லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதனால் சாஜித்தின் மோட்டார் சைக்கிள் லாரியின் பின் பகுதியில் பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சாஜித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அதன்பின் படுகாயமடைந்த சாஜித்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாஜித்தின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.