Categories
உலக செய்திகள்

மக்களுக்கு குட் நியூஸ்…. கொரோனா வைரஸ் முடிவுக்கு வர போகுதா….? ரஷ்ய நிபுணர் அளித்த பேட்டி….!!

உலகையே அச்சுறுத்தும் “ஒமிக்ரான்” வைரஸ் தொடர்பில் ரஷ்ய நிபுணர் ஒருவர் ஆறுதல் தரும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட “ஒமிக்ரான்” பத்தே நாட்களில் கிட்டத்தட்ட 38-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது. மேலும் ஒமிக்ரான் தொற்று மூன்று மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டிருப்பதால் மக்களிடையே அச்சமும் எழுந்துள்ளது. இந்த நிலையில் மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் ஆறுதல் தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் கமலேயா தேசிய தொற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் நிபுணரும், ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை உருவாக்கியவருமான பேராசிரியர் அனட்டோலி ஆல்ட்ஸ்டீன், ஸ்புட்னிக் ரேடியோவுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது “உருமாறிய டெல்டா வைரஸ் தொற்று அழிந்து ஒமிக்ரான் அந்த இடத்திற்கு வந்து விடும்” என்று கூறியுள்ளார். மேலும் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு அதிக ஆபத்தை ஏற்படுத்தாது. இருப்பினும் 3% பேர் தற்போது ஒமிக்ரானால் உயிரிழந்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் கொரோனா வைரஸ் முடிவுக்கு வரவுள்ளதாகவும் நோய்க்கிருமி தன்மை “ஒமிக்ரான்” வைரஸினால் குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதேசமயம் ஒமிக்ரான் வைரஸ் புத்தாண்டுக்கு முன்பாக தீவிரமடைய வாய்ப்பில்லை. ஒமிக்ரான் வைரஸ் அறிவியல் தரவுகளின்படி பேராபத்தை ஏற்படுத்தாது என்று பேராசிரியர் அனட்டோலி தெரிவித்துள்ளார். அதேபோலவே சிங்கப்பூர் சுகாதார அமைச்சகமும் இந்த ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக தற்போது உள்ள கொரோனா தடுப்பூசிகள் செயல்படாது என்பதற்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளது.

Categories

Tech |