கஞ்சாவை கடத்தி செல்ல முயன்ற பெண் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள க.விலக்கு பகுதியில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அப்போது அந்த காரில் ஏற்றி கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காரில் இருந்த 3 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த கணேசன், ராஜதானி கிராமத்தை சேர்ந்த காந்திமதி, வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த கோகுல் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களை கைது செய்து, கார் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்