ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் மோகன் பகான் அணியை வீழ்த்தி, மும்பை சிட்டி அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஏ.டி.கே மோகன் பகான் – மும்பை சிட்டி அணிகள் மோதியது. இதில் 4-வது நிமிடத்தில் மும்பை சிட்டி அணி வீரர் விக்ரம் பிரதாப் சிங் முதல் கோலை பதிவு செய்தார் .இதையடுத்து 25-வது நிமிடத்தில் மீண்டும் விக்ரம் பிரதாப் சிங் ஒரு கோல் அடிக்க 2-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி அணி முன்னிலையில் இருந்தது.
இதைத் தொடர்ந்து மும்பை சிட்டி அணி வீரர்கள் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர் .இதில் மோகன் பகான் அணி ஒரு கோல் மட்டுமே அடித்தது . இறுதியாக 5 -1என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி அணி அபார வெற்றி பெற்றது.