Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மொபட் மீது மோதிய வாகனம்…. காவலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

இருசக்கர வாகன விபத்தில் காவலாளி உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் அணியாபுரம் பகுதியில் சுப்பிரமணி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கோழிப்பண்ணை தீவன ஆணையில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சுப்பிரமணி வழக்கம்போல தனது மொபட்டில் தீவன ஆலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்றுகொண்டிருந்த போது அப்பகுதி வழியாக சென்ற இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் சுப்பிரமணி படுகாயமடைந்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக சுப்பிரமணியை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுப்பிரமணி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையறிந்த மோகனூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சுப்பிரமணியின் உடலை மீட்டு உடற்கூராவிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |