அமெரிக்க நிபுணர் ஒருவர், சுமார் 20 நாடுகளில் 226 நபர்களுக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் 24ஆம் தேதியன்று ஓமிக்ரான் என்ற கொரோனாவின் புதிய வகை மாறுபாடு கண்டறியப்பட்டது. அதனையடுத்து, பல நாடுகளிலும் அந்த வைரஸ் பரவத் தொடங்கியிருக்கிறது. எனவே, உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவின் தொற்றுநோய் நிபுணரான ஆண்டனி பாசி, சுமார் 20 நாடுகளில் தற்போது ஓமிக்ரான் வைரஸ் 226 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார். மேலும், டெல்டா போன்ற மற்ற வகை வைரஸ்களை விட இது வித்தியாசமான உருமாற்றங்கள் உடையது. எனினும், இது வேகமாக பரவுமா? என்பதை முடிவு செய்வது சிரமமாக உள்ளது என்று கூறியிருக்கிறார்.