‘மாநாடு’ படத்தை அஜித் இன்னும் பார்க்கவில்லை என வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இதனையடுத்து, நவம்பர் 25 ஆம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு அளித்த பேட்டி ஒன்றில், அஜித் மாநாடு படத்தை பார்த்து விட்டாரா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், மாநாடு படத்தை அஜித் இன்னும் பார்க்கவில்லை எனவும், அடுத்த வாரத்தில் அவர் பார்க்க இருக்கிறார் எனவும் உற்சாகத்துடன் பதிலளித்தார்.