Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாக பேசிய…. பாஜக நிர்வாகிக்கு ஜாமீன்….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டத்தில் காந்தி பூங்கா முன்பு  பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக அணியின் மாநில தலைவர் அகோரம் கலந்து கொண்டு பேசிய அவர் தமிழக முதல்வர் ஸ்டாலினை மரியாதை குறைவாக பேசினார். இதனால் ஜெயம் கொண்டான் போலீசார் அகோரத்தை  4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

அதன்படி இன்று ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு ரூ.2,00,000 பிணைய பத்திரம் மற்றும் 2 ஜாமீன்தாரர்கள் ரூ.10,000  பிணைய பத்திரம் ஆகியவை  கொடுத்ததன் அடிப்படையில் ஜாமீன் வழங்கினார்.

Categories

Tech |