Categories
மாநில செய்திகள்

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை….  58 வயது முதியவருக்கு வழங்கிய தீர்ப்பு…. நீதிமன்றம் அதிரடி….!!!! 

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 58 வயது முதியவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ரவி என்பவருக்கு வயது 58 . இவர் கடந்த 2018ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து அச்சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில் மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை போக்ஸோ வழக்காக மாற்றி சிறப்பு நீதிமன்றத்தில் மாற்றப்பட்டு நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி எம். ராஜலட்சுமி, ரவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |