Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதலர்கள்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மறவாநத்தம் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எலக்ட்ரீசியனான ஆனந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஆனந்தும், வேளச்சேரி பகுதியில் வசிக்கும் ரம்யா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி முத்துமாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர்.

அதன்பிறகு காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி ரம்யாவின் பெற்றோருடன் அவர்களை அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |