தொடர் கனமழை காரணத்தினால் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கும் கலெக்டர் அலுவலக வளாகம்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 20 தினங்களாக பலத்த கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணத்தினால் ஆங்காங்கே மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கின்றது. இந்நிலையில் இம்மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கு வளாகத்தில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பெரும் அவதி படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து இவ்விடத்தில் எந்த வாகனங்களும் நிறுத்த முடியாமல் தண்ணீர் தேங்கி நிற்கின்றது. ஆதலால் அந்த இடத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.