Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏரியில் குளிக்க சென்ற வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஏரியில் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள மல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுதம் என்ற மகன் இருந்தார். இதில் கவுதம் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கவுதம் மல்லூர் அருகே உள்ள ஓட்டேரி ஏரியில் குளிக்க சென்றார். அப்போது கவுதம் திடீரென ஏரியிலுள்ள சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு படையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

அந்த தகவலின்படி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவுதமை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் கவுதம் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து கவதமின் சடலத்தை தீயணைப்பு படையினர் மீட்டனர். அதன்பின் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கவுதமின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |