Categories
மாநில செய்திகள்

BREAKING: திருவள்ளூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் தமிழகத்தில் டிசம்பர் 3ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது புயலாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் டிசம்பர் 4 ஆம் தேதி வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கரையை நெருங்கும் என தெரிவித்துள்ளது.

இதையடுத்து திருவள்ளுர் மாவட்டத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை, காஞ்சிபுரம், தென் மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |