Categories
மாநில செய்திகள்

புதுச்சேரிக்கு மத்திய அரசு போதிய வெள்ள நிவாரணம் வழங்கும்….. உறுதியளித்த துணைநிலை ஆளுநர்….!!

புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் முகாமில் துணை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அதன்பிறகு குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மதிய உணவு பரிமாறினார்.மேலும் குழந்தைகளோடு அமர்ந்து உணவு அருந்தினார். அதுமட்டுமில்லாமல் குழந்தைகளுக்கு தேவையான பாடப்புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் எழுது பொருட்கள் ஆகியவற்றை வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மற்றும் காரைக்கால் மக்களுக்கு மத்திய அரசு போதுமான நிதியை வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

அதனைதொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் புதுச்சேரிக்கு வந்த மத்திய குழுவிடம், மாநிலத்திற்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் போதுமான நிதியை உறுதி செய்வதற்காக உள்துறை மந்திரி தொடர்பு கொண்டு பேசி உள்ளேன். எனவே மழை வெள்ளத்தில் ஏற்பட்ட நிலைமையை சமாளிக்கபதற்கான நிதியை மத்திய அரசு வழங்கும் என்று நம்புகிறேன் வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |