பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மன் கீ பாத் நிகழ்ச்சி மூலமாக உரையாடுவார். அந்தவகையில் இந்த மாதத்திற்கான மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்த நாளில் நாட்டின் ஆயுதப் படையினரை நினைவு கூறுவதோடு நெஞ்சுரம் கொண்டவர்களையும் நினைவு கூர்கிறோம். நம்மை சுற்றியுள்ள இயற்கை வளங்களை நாம் பாதுகாப்போம் அதன் பிரதிபலனாக இயற்கை நம்மை பாதுகாக்கும்.
இப்படிப்பட்ட ஒரு எடுத்துக்காட்டை தமிழ்நாட்டு மக்கள் பரந்துபட்ட அளவிலேயே வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்ட மக்கள் இயற்கையை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தூத்துக்குடியில் சிறிய தீவுகள், திட்டுகள், கடலில் மூழ்காமல் இருக்க பனைமரங்களை நடுகிறார்கள். புயல், சூறாவளியிலும் நிமிர்ந்து நின்று நிலத்திற்கு பாதுகாப்பாக இருக்கின்றன பனைமரங்கள்” என்று புகழ்ந்து பேசியுள்ளார்.