Categories
தேனி மாவட்ட செய்திகள்

சந்தேகப்படும்படி நின்ற மூதாட்டி…. போலீஸ் அதிரடி சோதனை…. சிக்கிய 1 கிலோ கஞ்சா….!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூதாட்டியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள போஜன் பார்க் பகுதியில் போடி நகர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி மூதாட்டி ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் போடி கிழக்கு தெருவில் வசிக்கும் சரஸ்வதி என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பதும், விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மூதாட்டிய கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |