Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் சோதனைச்சாவடியில் திடீரென நடைபெற்ற தாக்குதல்….. 2 ராணுவ வீரர்கள் பலி….

பாகிஸ்தானில் உள்ள சோதனைச் சாவடி ஒன்றில் திடீரென நடத்தப்பட்ட தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள சோதனைச் சாவடி ஒன்றில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து எதிர்பாராதவிதமாக நடைபெற்ற இந்த மோதலில் இரண்டு இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இராணுவத்தினர் அப்பகுதியை சுற்றி பயங்கரவாதிகள் யாரேனும் உள்ளனரா என தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

Categories

Tech |