மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்னகாம்பட்டி கிராமத்தில் கன்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணம்மாள்(67) என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்த 2 மகள்களுக்கும் திருமணம் முடிந்து அவர்கள் வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் தம்பதியினர் சின்னகாம்பட்டியில் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூதாட்டி கிருஷ்ணம்மாள் கட்டிலில் இருந்து கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக கிருஷ்ணம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் தனக்கும், என் கணவருக்கும் உதவி செய்ய யாரும் இல்லை என்ற மனவேதனையில் மூதாட்டி கிருஷ்ணம்மாள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.