Categories
உலக செய்திகள்

பிரித்தானியாவின் ராணிக்கு வழங்கப்பட்டுள்ள உலகின் சிறப்பு வாய்ந்த போன்…. அதிலிருந்து இரண்டு பேரை மட்டுமே தொடர்புகொள்வாராம்….

பிரித்தானிய நாட்டின் ராணிக்கு அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட மொபைல் போன் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து அவர் இருவரை மட்டுமே தொடர்பு கொள்வாராம்.

பிரித்தானிய இராணி அந்த தனிப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து தன்னுடைய மகள் இளவரசி ஆன் மற்றும் பந்தய மேலாளர் ஜான் வாரன் ஆகிய இருவருடன் மட்டுமே தொடர்பு கொண்டு பேசுவாராம். பிரித்தானியாவின் M16 அமைப்பின் சிறப்பம்சங்கள் கொண்ட சாம்சங் மொபைல்போனையே ராணி பயன்படுத்தி வருகிறார். இந்த போன் மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ராணியை இந்த இருவரும் தங்களது மொபைலில் இருந்து தொடர்பு கொள்ளலாம்.

மேலும் யாராலும் ராணியாரின் இந்த மொபைலில் ஊடுருவி பயன்படுத்த இயலாது எனவும் ஜான் வாரன் எந்த நேரத்தில் தொடர்பு கொண்டாலும் ராணியார் பதிலளிப்பார் எனவும் கூறப்படுகிறது. ராணியின் நெருங்கிய நண்பரின் மருமகனான இந்த ஜான் வாரன் குதிரை பந்தயத்தில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராணியார் தன்னுடைய பாசமிகு மகளான ஆன் மற்றும் ஜான் வாரன் இருவரையும் தொடர்பு கொள்ளுமாறு இந்த போன் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும் ஏனெனில் அவர்கள் இருவரும் ராணியாரின் முக்கியமான நபர்கள் எனவும் அரச குடும்பத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |