நியூசிலாந்துக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஸ்ரேயாஸ் அய்யர் சதம் அடித்து அசத்தினார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் தனது முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். இவர் 173 பந்துகளில் 13 பவுண்டரி , 2 சிக்ஸர் என மொத்தம் 105 ரன்கள் குவித்துள்ளார். 26 வயதான ஸ்ரேயாஸ் அய்யர் கடந்த 2017-ஆம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமானார் .இதன் பிறகு 4 வருடங்களுக்குப் பிறகுதான் தற்போது அவருக்கு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேசமயம் தனது முதல் போட்டியிலேயே சதமடித்த அசத்தியுள்ளார்.
இதன்மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து அசத்திய 16-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார் .இதையடுத்து சர்வதேச அளவில் முதல் டெஸ்டில் சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் 112 -வது இடத்தை பிடித்துள்ளார். இதுகுறித்து ஸ்ரேயாஸ் அய்யர் நிருபர்களிடம் கூறுகையில்,” முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது .என்னுடைய வாழ்நாளில் இது மிகப்பெரிய சாதனையாகும். முதல் நாளில் இருந்தே நடந்த அனைத்திற்கும் மகிழ்ச்சியாக உள்ளேன் அதோடு சுனில் கவாஸ்கர் அறிமுக டெஸ்டுக்கானதொப்பியை எனக்கு வழங்கினார் .அவர் எனக்கு மிகவும் ஊக்கமளித்தார். சதம் அடித்தது மனதிற்கு மிகவும் மனநிறைவை தந்துள்ளது” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.