அதிகமான அகதிகளை ஏற்றிக்கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு தப்ப முயற்சி செய்தபோது கடலில் தத்தளித்த 487 பேரை துனிசிய கடற்படை அதிகாரிகள் மீட்டனர்.
அரசியல் ஸ்திரத்தன்மை இன்மை, பொருளாதார மந்தநிலை ஆகியவைகளால் வாழ்வாதாரம் பாதித்த எகிப்து, சிரியா, சூடான், பாகிஸ்தான், எத்தியோப்பிய மற்றும் பாலீஸ்தீன நாட்டு மக்கள், துனிசியா, லிபியா நாடுகள் வழியாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். அதன்படி அகதிகளை ஏற்றி வந்து நடுக்கடலில் சிக்கிக் கொண்ட படகிலிருந்து 93 குழந்தைகள், 13 பெண்கள் உட்பட 487 பேரை மீட்டதாக துனிசிய கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.