சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாநாடு படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியிருந்த மாநாடு திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.
நேற்று வெளியான இப்படத்தை பார்த்த சிம்பு ரசிகர்கள் பலரும் அவருக்கு இது மிகப் பெரிய கம்பேக் என்று கொண்டாடி வருகின்றனர். மேலும் ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரிடமும் மாநாடு திரைப்படம் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் மாநாடு படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதனை உறுதி செய்யும் வகையில் இயக்குனர் வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் “ரஜினிகாந்த் மாநாடு திரைப்படத்தை பார்த்துவிட்டு தொலைபேசியின் மூலமாக தங்களை தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்” என குறிப்பிட்டுள்ளார்.
#Thalaivar @rajinikanth called and wished!!!
Me & STR
And that’s the tweet🙏🏽🙏🏽#maanaaduBlockbuster
— venkat prabhu (@vp_offl) November 26, 2021