Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இ-சேவை மையம்” மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

இ-சேவை மையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் கம்ப்யூட்டர், பிரிண்டர் போன்றவற்றை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மருங்குளத்தில் கிராம இ-சேவை மையம் இருக்கிறது. இந்த மையத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த கம்ப்யூட்டர், பிரிண்டர் போன்றவற்றை திருடி சென்றுள்ளனர். இந்நிலையில் இ-சேவை மையத்திற்கு வந்த அலுவலர்கள் கம்ப்யூட்டர், பிரிண்டர் ஆகியவை திருட்டு போனதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக சேவை மைய நிர்வாகி ராஜேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |