Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மன உளைச்சலில் இருந்த பெண்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

கடனை கட்ட முடியாததால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர்  தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார். இந்நிலையில் தேவி மகளிர் சுய உதவிக்குழு மூலம் 1 1\2 லட்சம் கடன் வாங்கினார். ஆனால் அந்த கடனை தேவியால் கட்ட முடியவில்லை. இதனால் தேவி மன உளைச்சலில் இருந்தார்.

இந்நிலையில் தேவி திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதனால் தேவியின் அலறல் சத்தம் கேட்டு தங்கராஜ் விரைந்து சென்று அவர் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினார். இதனால் அவரது உடலிலும் தீக்காயம் ஏற்பட்டது. இவர்கள் 2 பேரையும் அருகில் உள்ளவர்கள் உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தேவி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |