திருச்சி நவல்பட்டு சிறப்பு உதவியாளர் பூமிநாதன் கொலை வழக்கில் கைதான மணிகண்டனை 24 மணி நேரம் போலீஸ் காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சிறப்பு ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் கைதான மணிகண்டனை 24 மணி நேரம் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு காவல் துறையினருக்கு திருமயம் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஆடு திருடர்களை பிடிக்க சென்ற, சிறப்பு உதவியாளர் பூமிநாதனை கொலை செய்த வழக்கில் மணிகண்டன் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில், விசாரணையை முடித்து நாளை பகல் 1 மணி அளவில் மணிகண்டனை ஆஜர்படுத்துமாறு திருமயம் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.