Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்…. கடைகள் மூடல்….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை, விசைத்தறி மற்றும் அது தொடர்புடைய லட்சக்கணக்கான நிறுவனங்கள் இயங்கி வருகிறது. பின்னலாடை உற்பத்திக்கு பிரதான தேவை நூல். ஆனால் அதன் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த நவம்பர் மாதம் 1  தேதி கி லோவுக்கு 50 ரூபாய் உயர்ந்தது. கடந்த 10 மாதங்களில் அனைத்து நூல்களின் விலையும் கிலோவுக்கு 120 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

இந்நிலையில் நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர் தொழில் துறையினர் சார்பாக இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. அதனால் பின்னலாடை நிறுவனங்கள் இன்று இயங்காமல் மூடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டீமா மற்றும் சைமா உள்ளிட்ட தொழில் அமைப்புகள், சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்றுள்ளனர். பஞ்சு, நூல் ஏற்றுமதியை தடை செய்யவும், பஞ்சு பதுக்கலை தடுக்க வலியுறுத்தியும் மத்திய, மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பின்னலாடை துறையினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |