Categories
மாநில செய்திகள்

21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…. எங்கெல்லாம் தெரியுமா…? இதோ முழு விவரம்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர்.

தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும், திருவாரூர், ராமநாதபுரம், மதுரை, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, திருச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |