Categories
மாநில செய்திகள்

திருப்பத்தூரில் நவம்பர் 27ஆம் தேதி…. மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன . அதனால் மக்கள் மீண்டும் வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் அரசு தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அனுமதி வழங்கியுள்ளது.இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வாரமும் தனியார் துறைகள் சார்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி காட்டும் அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து வேலை வாய்ப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. அதில் 70க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு ஊழியர்களை தேர்வு செய்ய உள்ளனர். அதனால் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். இந்த முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

Categories

Tech |