Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“12 வயது அதிகமா இருக்கு” காதலால் பெண் எடுத்த விபரீத முடிவு…. கடிதத்தில் உருக்கம்…!!

தாய் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இடிகரை ஆப்பிள் கார்டன் பகுதியில் அம்சப்பிரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பி.எஸ்.சி பட்டதாரியான கௌசிகா என்ற மகள் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் சரவண பிரசாத் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இது குறித்து அறிந்த அம்சப்பிரியா தனது மகளை கண்டித்துள்ளார். மேலும் கௌசிகாவை விட சரவணன் பிரசாத்துக்கு 12 வயது அதிகம் என்பதை காரணம் காட்டி அம்சபிரியா அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கௌசிகா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கௌசிகாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் கௌசிகா எழுதிய கடிதத்தைக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் எனது தாய் 12 வயது வித்தியாசம் உடைய வாலிபரை திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்து கொள்கிறேன் என கௌசிகா குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |